Labels

Wednesday, December 14, 2011

20. நிதி நிர்வாகம்0.







2011 டிசம்பர் 10ம் தேதி 2வது லைன், பீச் ரோட்டிலுள்ள சென்னை பங்குச் சந்தை கட்டிடத்தில் பணத்தைப் பற்றிய விழிப்புணர்வு”  (Pocket Money Program) அதாவது சிறு செலவுக்கான தொகையை எப்படி நிர்வகிப்பது என்ற ஒரு நிகழ்ச்சி நடத்தப் பெற்றது. அதை சென்னை பங்குச் சந்தை அமைப்பும், செபியின் என்..எஸ்.ம்மும் சேர்ந்து நடத்தினர். சென்னை மாநகராட்சி பள்ளிகளைச் சார்ந்த 50 ஆசிரியர்களுக்கு 9வது, 10வது படிக்கும் மாணவர்களுக்கு சுவையாகவும், சுலபமாக புரியும் விதத்திலும் எப்படி பணத்தைப் பற்றி எடுத்துச் சொல்வது என்று பயிற்சி அளிக்கப் பட்டது

அதில் என்..எஸ்.ம்மைச் சார்ந்த திரு. முரளி, முதலீட்டு ஆலோசகர் திரு. . நாகப்பன், சென்னை பங்குச் சந்தை அமைப்பைச் சார்ந்த திரு சம்பத் ஆகியோருடன் நானும் பேசும் வாய்ப்புக் கிடைத்தது.

1.   பணம் மட்டுமே எல்லாவற்றையும் வாழ்க்கையில் தருமா?
2.   பணத்தைச் சேமிக்க வேண்டும், ஏன்?
3.   பணத்தைச் சிக்கனமாகச் செலவளிக்க வேண்டும், எப்படி?
4.   சேமிக்க எப்படித் திட்டமிட வேண்டும்?
5.   பணத்தை முதலீடு செய்ய வேண்டும், ஏன்?
6.   முதலீடு பெருக வேண்டும், ஏன்? எவை அவை?
7.   எந்த வகையான முதலீடு யாருக்கு நல்லது?
8.    வங்கி நடவடிக்கைகள்.
9.    எப்போது, எதற்கு கடன் வாங்கலாம்.
10. ஏமாறாமல் கடன் வாங்குவ்து எப்படி?

என்ற தலைப்புகளில் வருங்கால வளமான இந்தியாவை உருவாக்குவது என்பது குறித்து பேசினோம்.

முக்கியமாக மாநகராட்சியைச் சார்ந்த முக்கிய கல்வி அதிகாரி திரு கோவிந்தசாமி அவர்கள் பேசும்போதுநம்மில் பெரும்பாலோர் சராசரி வயதில் பாதியைக் கடந்துவிட்டோம். இனி எதிர்காலம் மாணவர்கள் கையில்தான். அவர்களை ஒழுங்கான முறையில் வழி நடத்த வேண்டியது நமது கடமைஎன்று உணர்ச்சி பூர்வமாகச் சொல்லியதுதான்!
பணம் வளரும் ----

No comments:

Post a Comment